இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி
தலையங்கம்

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!” – உச்ச நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்தி

Jun 4, 2025

இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது ராகுல் காந்தியின் சமீபத்திய நடவடிக்கை. 2014 முதல் 2024 வரையிலான அனைத்து தேர்தல்களிலும் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. இந்த மோசடிகளில் பாஜக நேரடியாகவும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்ததாகக் கூறி, உண்மையை வெளிக்கொணர உச்ச நீதிமன்றத்தின் மடலுக்கே சென்றுள்ளார்.

பாஜக எப்படி அதிகாரத்தை கைப்பற்றியது என்பதற்கான ஆதாரங்களுடன் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது –
தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது என்பது, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகிய மூவரும் பங்கேற்கும் ஒரு நீதி முறைப்படி அமையவேண்டும். ஆனால் தற்போது, இரவோடு இரவாக, இரு ஆளுங்கட்சித் தலைவர்களும் ஒரே முடிவுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டு ஒரு சபாநாயகரை வைத்து தேர்தல் ஆணையரை நியமிப்பது நீதிக்கே எதிரானது என அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இவை மட்டுமல்ல, பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்ற ஒரு முக்கிய அரசியல் கூட்டத்தில், ராகுல் காந்தியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், இது ஒரு திட்டமிட்ட செயலாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பாஜக சார்பாக பணம் பெற்றுக் கொண்டு, ஒருபக்கமான முடிவுகளை எடுத்து வருவதாகவும், இதற்கான ஆவண ஆதாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ராகுல் தெரிவித்திருக்கிறார்.

இந்த அனைத்து செயல்களும் இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளாக இருப்பதனால், அதை மீட்டெடுக்கவே உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *